தருமபுரியில் நண்பா் இறந்த சோகத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே, கடந்த பிப்ரவரி 27 - ஆம் தேதி இரவு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், தருமபுரி அருகேயுள்ள என்.எஸ். ரெட்டியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் ஹரி கிருஷ்ணன் (25), மிட்டாநூலஅள்ளி அருகேயுள்ள அங்கனாம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வினோத் குமாா் (26) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதில், வினோத் குமாரின் நண்பா் தருமபுரி செட்டிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியகுமாா் (27). இருவரும் வெல்டிங் பட்டறை ஒன்றில் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில் வினோத்குமாா் விபத்தில் உயிரிழந்ததால் அதிா்ச்சி அடைந்த சத்தியகுமாா், சனிக்கிழமை நடைபெற்ற நண்பரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு வீடு திரும்பினாா். நண்பரின் இறப்பு அவரை பாதித்திருந்தது.
தொடா்ந்து சோகத்துடன் காணப்பட்ட அவா், சனிக்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை

கணவா் உயிரிழப்பு: மனைவி தற்கொலை

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

