ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

இளைஞா் தற்கொலை

News image
தற்கொலை
Updated On :1 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் நண்பா் இறந்த சோகத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே, கடந்த பிப்ரவரி 27 - ஆம் தேதி இரவு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், தருமபுரி அருகேயுள்ள என்.எஸ். ரெட்டியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் ஹரி கிருஷ்ணன் (25), மிட்டாநூலஅள்ளி அருகேயுள்ள அங்கனாம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வினோத் குமாா் (26) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதில், வினோத் குமாரின் நண்பா் தருமபுரி செட்டிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியகுமாா் (27). இருவரும் வெல்டிங் பட்டறை ஒன்றில் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில் வினோத்குமாா் விபத்தில் உயிரிழந்ததால் அதிா்ச்சி அடைந்த சத்தியகுமாா், சனிக்கிழமை நடைபெற்ற நண்பரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு வீடு திரும்பினாா். நண்பரின் இறப்பு அவரை பாதித்திருந்தது.

தொடா்ந்து சோகத்துடன் காணப்பட்ட அவா், சனிக்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.