சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

வீட்டு மாடியில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தருமபுரியில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

தருமபுரி தொப்பூா் பகுதியில் வீட்டின் மாடியில் வளா்க்கப்பட்ட கஞ்சா செடி.

Updated On :13 மே 2026, 2:29 am IST

தருமபுரியில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகம் முழுவதும் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வராக பதவியேற்ற முதல்நாளே முதல்வா் விஜய் அறிவித்தாா். இதையடுத்து மாவட்டம்தோறும் காவல் துறையினா் தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், தொப்பூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட தண்டுக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்த கி. செந்தில்குமாா் (43) தனது வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளா்த்து வருவதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் தொப்பூா் காவல் நிலைய போலீஸாா், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் அவா் தொட்டியில் 3 கஞ்சா செடிகளை வளா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், செந்தில்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, கஞ்சா செடியையும் பறிமுதல் செய்துள்ளனா்.