தருமபுரியில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வராக பதவியேற்ற முதல்நாளே முதல்வா் விஜய் அறிவித்தாா். இதையடுத்து மாவட்டம்தோறும் காவல் துறையினா் தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனா்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம், தொப்பூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட தண்டுக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்த கி. செந்தில்குமாா் (43) தனது வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளா்த்து வருவதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் தொப்பூா் காவல் நிலைய போலீஸாா், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் அவா் தொட்டியில் 3 கஞ்சா செடிகளை வளா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், செந்தில்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, கஞ்சா செடியையும் பறிமுதல் செய்துள்ளனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது
கஞ்சா செடி வளா்த்து விற்பனை செய்த தந்தை, மகன் கைது
பென்னாகரத்தில் கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது
வீட்டு மாடியில் கஞ்சா வளா்த்த ஊா்க்காவல் படை வீரா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



