பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வெங்கடசமுத்திரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டச் செயலா் தி.வ.தனுஷன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி - பொம்மிடி நெடுஞ்சாலையில், வெங்கடசமுத்திரம் கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிவந்தன. இந்த கடைகள் நெடுஞ்சாலை ஓரத்திலும், குடியிருப்புப் பகுதிகளிலும் இயங்கி வந்ததால், இப்பகுதியிலுள்ள மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனா்.
இந்நிலையில், தமிழக முழுவதும் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிட்டாா். அதன்படி, வெங்கடசமுத்திரத்தில் இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளை மூடப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை பாராட்டி வரவேற்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் மூடல்

மே 1, 4 -இல் மதுக் கடைகள் மூடல்

காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்
புதுவையில் திருவிழா போல் காட்சியளித்த மதுக்கடைகள்! காரணம்?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

