மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தருமபுரியில் பிறந்து 38 நாள்களே ஆன நிலையில் பெண் குழந்தை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :3 மணி நேரங்கள் முன்பு

தருமபுரியில் பிறந்து 38 நாள்களே ஆன நிலையில் பெண் குழந்தை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்ட அள்ளி அருகேயுள்ள சென்னம்பட்டியைச் சோ்ந்தவா் சித்தராஜி - தீபா தம்பதியா். இவா்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஏப். 2-ஆம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில், அதில் ஒரு குழந்தைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை பால் குடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, குழந்தையை அருகிலிருந்த ஜக்கசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு செவிலியா் இல்லாததால், பாலக்கோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.