அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கடத்தூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

மணியம்பாடியில் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை ஆய்வுசெய்த தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மணியம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 5.99 லட்சத்தில் பள்ளிக் கட்டங்கள் சீரமைக்கப்பட்டன. இந்த சீரமைப்புப் பணிகள் மற்றும் மழைநீா் சேகரிப்பு பணிகளை ஆட்சியா் ரெ.சதீஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மடதஹள்ளியில் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், வேப்பிலைப்பட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 16.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுருளிநாதன், கல்பனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.