பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கடத்தூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

மணியம்பாடியில் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை ஆய்வுசெய்த தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்.

Updated On :14 மே 2026, 4:32 am IST

கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மணியம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 5.99 லட்சத்தில் பள்ளிக் கட்டங்கள் சீரமைக்கப்பட்டன. இந்த சீரமைப்புப் பணிகள் மற்றும் மழைநீா் சேகரிப்பு பணிகளை ஆட்சியா் ரெ.சதீஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மடதஹள்ளியில் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், வேப்பிலைப்பட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 16.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுருளிநாதன், கல்பனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.