உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஒசூரில் உள்ள 2,500 சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் வியாழக்கிழமை முழுமையாக இயங்காது என ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
விவசாயத்தைக் காக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், தமிழக காவிரி டெல்டா பகுதி மட்டுமின்றி 15 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பது மட்டுமின்றி தமிழக மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீரை தமிழகம் பெற வேண்டியும் தமிழக அரசியல் கட்சிகள் வியாழக்கிழமை நடத்தும் முழு பந்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஒசூரில் இயங்கி வரும் 2,500 தொழிற்சாலைகள் இயங்காது என அதில் தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் ஞானசேகரன், செயலாளர் பத்மநாபன், பொருளாளர் வேல்முருகன், துணைத் தலைவர்கள்சுப்பிரமணி, கெஞ்சப்பா, முருகன், இணைச் செயலாளர்கள் குமரவேல், குமணன், பைரப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









