கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஒசூரில் இன்று 2,500 சிறுகுறு தொழிற்சாலைகள் மூடல்!

உடனடியாக  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஒசூரில் உள்ள 2,500 சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் வியாழக்கிழமை

Updated On :5 ஏப்ரல் 2018, 7:26 am IST

உடனடியாக  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஒசூரில் உள்ள 2,500 சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் வியாழக்கிழமை முழுமையாக இயங்காது என ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
விவசாயத்தைக்  காக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், தமிழக காவிரி டெல்டா பகுதி மட்டுமின்றி 15 மாவட்ட  விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பது மட்டுமின்றி தமிழக மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீரை தமிழகம் பெற வேண்டியும் தமிழக அரசியல் கட்சிகள் வியாழக்கிழமை நடத்தும் முழு பந்துக்கு ஆதரவு  தெரிவித்தும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஒசூரில் இயங்கி வரும் 2,500 தொழிற்சாலைகள் இயங்காது என அதில் தெரிவித்தார். 
முன்னதாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர்  ஞானசேகரன், செயலாளர் பத்மநாபன், பொருளாளர் வேல்முருகன், துணைத் தலைவர்கள்சுப்பிரமணி,  கெஞ்சப்பா, முருகன், இணைச் செயலாளர்கள் குமரவேல், குமணன், பைரப்பா உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.