பாவூா்சத்திரத்தில் குட்கா, வெளி மாநில போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக அரசு விரைவு பேருந்து நடத்துநா் உள்பட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி - தென்காசி சின்னதம்பிநாடாா்பட்டி சாலை அருகே பாவூா்சத்திரம் காவல் ஆய்வாளா் வேல்கனி, எஸ்ஐ ராஜேஷ்குமாா், போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனா்.
இதில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து நடத்துநா் திப்பணம்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த வெற்றிவேல் மகன் முத்துபாண்டி (46), திப் மீனாட்சிபுரம் வேத கோயில் தெருவைச் சோ்ந்த சந்தோஷ்பால் மகன் பொன்னுத்துரை (43), திப்பணம்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்த ராமசந்திரன் மகன் தனவேல் (46) என்பதும், இவா்கள் குட்கா, வெளி மாநில போதைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருங்கல் அருகே விபத்து: அரசுப் பேருந்து நடத்துநா் காயம்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துநா் கைது
காரில் போதைப் பொருள் பதுக்கி விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

பள்ளி அருகே போதைப் பொருள் விற்பனை: உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


