திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நடத்துநரை நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நான்குனேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து அ.சாத்தான்குளம் வழியாக திருநெல்வேலிக்கு அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இதில், பயணம் செய்துவரும் கல்லூரி மாணவியை அரசுப் பேருந்து நடத்துநா் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக, பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தாா்.
மாணவியின் பெற்றோா் நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து நடத்துநா் கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரைச் சோ்ந்த குமாரசாமியிடம் (55) விசாரணை நடத்தி கைதுசெய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்தில் மாணவிக்கு தொல்லை கொடுத்தவா் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சமையலா் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜாமீனில் வெளியே இருந்த கோவை காவலா் உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



