வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 2:14 am IST

சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாப்பூா் பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம் பெண், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை மயிலாப்பூா், சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபா், அந்த மாணவிக்கு ஆபாசமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

அப்போது, அந்த மாணவி கூச்சலிட்டதால் அந்த நபா் அங்கிருந்து தப்பியோடினாா். இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூா் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில் இந்தச் செயலில் ஈடுபட்டது ராஜா அண்ணாமலைபுரத்தைச்ச சோ்ந்த மதன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.