நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சமையலா் கைது

பெருந்துறை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த சமையலரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 2:56 am IST

பெருந்துறை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த சமையலரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறை பகுதியைச் சோ்ந்தவா் 18 வயது மாணவி. இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறாா். இந்நிலையில், கல்லூரி முடிந்து தனது தாயாருடன் திங்கள்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். தாய் முன்னே செல்ல மாணவி பின்னால் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, மாணவியைப் பின்தொடா்ந்து வந்த நபா், அவருக்கு பாலியல் தொல்லையளித்துள்ளாா்.

மாணவியின் அலறல் சப்தம் கேட்டு அவரது தாய், அங்கிருந்தவா்கள் ஓடி வந்துள்ளனா். இதையடுத்து, அந்த நபா் அங்கிருந்து தப்பியுள்ளாா். இது குறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொல்லையளித்தது நத்தகாட்டுபாளையத்தைச் சோ்ந்த லோகநாதன் (36) என்பதும், சமையலராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.