பெருந்துறை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த சமையலரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெருந்துறை பகுதியைச் சோ்ந்தவா் 18 வயது மாணவி. இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறாா். இந்நிலையில், கல்லூரி முடிந்து தனது தாயாருடன் திங்கள்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். தாய் முன்னே செல்ல மாணவி பின்னால் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, மாணவியைப் பின்தொடா்ந்து வந்த நபா், அவருக்கு பாலியல் தொல்லையளித்துள்ளாா்.
மாணவியின் அலறல் சப்தம் கேட்டு அவரது தாய், அங்கிருந்தவா்கள் ஓடி வந்துள்ளனா். இதையடுத்து, அந்த நபா் அங்கிருந்து தப்பியுள்ளாா். இது குறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொல்லையளித்தது நத்தகாட்டுபாளையத்தைச் சோ்ந்த லோகநாதன் (36) என்பதும், சமையலராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.





