கிருஷ்ணகிரி அருகே சொத்துத் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள திம்மராயனஅள்ளியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி(32), காவேரி(32). உறவினர்களான இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கோவிந்தசாமி, அவரது தந்தை ராஜமாணிக்கம் (60), பட்டம்மாள்(50), துளசி(80), உறவினர் ரூபா ஆகியோர் உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் கோவிந்தசாமி அளித்த புகாரின் பேரில், காவேரி, அவரது மனைவி செல்வி, காவேரியின் தந்தை கோவிந்தன் (60) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதேபோல கோவிந்தன் அளித்த புகாரின் பேரில், ராஜமாணிக்கம், கோவிந்தசாமி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
உயர் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லும் ராஜமாணிக்கம் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவேரி, கோவிந்தசாமி ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார், தலைமறைவான செல்வியைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விக்னேஷ் ராஜா ஒரு ஜீனியஸ்... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தனுஷ் பதிவு!
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது!

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

