தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தளிஅள்ளியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள தளிஅள்ளியில் பாசன கால்வாய் குறுக்கே பழுதடைந்துள்ள சிறு பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :9 ஜூலை 2018, 3:08 am

காவேரிப்பட்டணம் அருகே உள்ள தளிஅள்ளியில் பாசன கால்வாய் குறுக்கே பழுதடைந்துள்ள சிறு பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளிஅள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு காவேரிப்பட்டணத்தை சார்ந்தே உள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள பாசன கால்வாய்க்கு குறுக்கே உள்ள சிறு பாலம் வழியாகத்தான் மாணவர்கள், விவசாயிகள் நாள்தோறும் காவேரிப்பட்டணம் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிறுபாலம் பழுதடைந்தது. எனினும், இந்த பாலம் வழியாகத்தான் அனைவரும் சென்று வருகின்றனர். எனவே, பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.