தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தளிஅள்ளியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள தளிஅள்ளியில் பாசன கால்வாய் குறுக்கே பழுதடைந்துள்ள சிறு பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:08 am

DIN

காவேரிப்பட்டணம் அருகே உள்ள தளிஅள்ளியில் பாசன கால்வாய் குறுக்கே பழுதடைந்துள்ள சிறு பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளிஅள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு காவேரிப்பட்டணத்தை சார்ந்தே உள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள பாசன கால்வாய்க்கு குறுக்கே உள்ள சிறு பாலம் வழியாகத்தான் மாணவர்கள், விவசாயிகள் நாள்தோறும் காவேரிப்பட்டணம் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிறுபாலம் பழுதடைந்தது. எனினும், இந்த பாலம் வழியாகத்தான் அனைவரும் சென்று வருகின்றனர். எனவே, பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.