விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு விழா
ராயக்கோட்டையில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


ராயக்கோட்டையில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு விழா, ராயக்கோட்டை பழையூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடந்தது. இதற்கு மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் சுந்தரம் முன்னிலை வகித்தார். ஐக்கிய பொதுவுடைமைக் கட்சியின் மாநிலத் தலைவர் பட்டாபிராமன் அலுவலகத்தைத் திறந்து வைத்து விவசாயிகளின் நலன் குறித்து விளக்கிப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி தலைவர்கள் ஊத்தங்கரை முருகேசன், பென்னாகரம் ரவி, சேலம் மணி, ஒசூர் வைத்தி, ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டத் தலைவர் மாதன் நன்றி கூறினார். இதில் ராயக்கோட்டை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...