மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கொத்தடிமையாக இருந்த சிறுவன் மீட்பு

கிருஷ்ணகிரி அருகே நீர் நிலையில் வாத்து மேய்த்துக் கொண்டு, கொத்தடிமையாக இருந்த 14 வயது சிறுவனை வருவாய் கோட்டாட்சியர்

Updated On :12 நவம்பர் 2018, 10:06 pm



கிருஷ்ணகிரி அருகே நீர் நிலையில் வாத்து மேய்த்துக் கொண்டு, கொத்தடிமையாக இருந்த 14 வயது சிறுவனை வருவாய் கோட்டாட்சியர் திங்கள்கிழமை மீட்டார்.
சென்னையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி, கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். அப்போது, வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், கடாம்பூரைச் சேர்ந்த வள்ளி பேசும்போது, தனது மூன்றாவது மகன் கடந்த 5 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் கொத்தடிமையாக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, தேசிய ஆதிவாசி தோழமைக் கழகத்தினர், கிருஷ்ணகிரியில் மேற்கொண்ட விசாரணையில் வள்ளியின் கணவர் சரவணன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு, கிட்டம்பட்டியைச் சேர்ந்த பாபு என்பவரிடம் கொத்தடிமையாக சிறுவனை விட்டுச் சென்றது தெரியவந்தது.
மேலும், கொத்தடிமையான சிறுவன், கிருஷ்ணகிரி, ஈரோடு, விழுப்புரம் மற்றும் கேரள மாநிலத்தில் வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய ஆதிவாசி தோழமை கழகத்தினர், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் என்.சரவணிடம் இதுகுறித்து புகார் மனு அளித்தனர்.
வருவாய் கோட்டாட்சியர் என்.சரவணன், கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் கிராமத்தில் உள்ள நீர் நிலையில், வாத்து மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு, தாய் வள்ளியிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தார். மேலும், சிறுவனை கொத்தடிமையாக வைத்திருந்த பாபுவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.