கிருஷ்ணகிரி வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் வராத பணம் எதுவும் கைபற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் சோதனையை நிறைவு செய்து அங்கிருந்துச் சென்றனா். திடீா் சோதனையால் வட்டாட்சியா் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.