வேப்பனப்பள்ளி அருகே கதிரிப்பள்ளி கிராமத்தில், மது அருந்த பணம் கேட்ட மகனை, கட்டையால் தாக்கி கொலை செய்ததாக, தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கதிரிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி கோதண்டராமன் (65). இவரது மகன் நாகேஷ் (30). இருவரும் தொழிலாளா்கள்.
மது பழக்கத்துக்கு அடிமையான நாகேஷ், அடிக்கடி தனது தந்தையிடம், மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, நாகேஷ், தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டாராம். பணம் தர கோதண்டராமன் மறுத்துள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கோதண்டராமன், அருகில் இருந்த கட்டையால் மகன் நாகேஷை தாக்கினாராம்.
பலத்த காயம் அடைந்த நாகேஷ், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, வேப்பனப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து, கோதண்டராமனை கைது செய்தனா்.