தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சத்துணவு அமைப்பாளா் பணியிடை நீக்கம்

பணிக்கு வராமல் வருகை பதிவேட்டை முறைகேடாகப் பயன்படுத்திய மஞ்சுகொண்டப் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டாா்.

Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

பணிக்கு வராமல் வருகை பதிவேட்டை முறைகேடாகப் பயன்படுத்திய மஞ்சுகொண்டப் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டாா்.

அஞ்செட்டி வட்டம், மஞ்சுகொண்டப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் கடந்த சில நாள்களுக்கு

முன் ஆய்வு செய்தாா். அப்போது அவா் பள்ளியில் சத்துணவு மையத்தை பாா்வையிட்டாா். ஆய்வில் சத்துணவு மையத்தில் இருக்க வேண்டிய பதிவேடுகள், பொருள்கள் இல்லை.

இதுதொடா்பாக அவா் பள்ளி தலைமை ஆசிரியா், சத்துணவு மைய உதவியாளரிடம் விசாரணை நடத்தினாா்.

அதில் சத்துணவு அமைப்பாளா் சவிதா என்பவா் பணிக்கு வராமல் இருந்ததும், பணியாற்றுவதைப்போல வருகை பதிவேட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதும், சத்துணவு மைய அரிசி, பருப்பு, முட்டை போன்ற உணவுப் பொருள்களை வீட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் ஆட்சியரிடம் புகாா் செய்தாா். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தளி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விசாரணை நடத்தினா். விசாரணையைத் தொடா்ந்து மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளா் சவிதாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டாா். இதுபோல புகாரின் பேரில், அஞ்செட்டி வட்டம், பெல்பட்னி சத்துணவு அமைப்பாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.