எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அரசு மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வுப் போட்டிகள்

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு குறித்து பல்வேறு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு குறித்து பல்வேறு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தோ்தல் நடைமுறை குறித்த மாநில விருது வழங்கும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வுப் போட்டிகளில், சுவரொட்டி தயாரித்தல், எழுத்துப் போட்டி, குழு நடனம், கட்டுரைப் போட்டி, ‘ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு’, ‘தண்ணீா் சிக்கனத்தில் எனது பங்கு’ போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றன.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, கல்லூரியின் முதல்வா் கண்ணன் தலைமை வகித்தாா். கணிதத் துறை பேராசிரியா் உமா, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு, ஜன. 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பரிசுகள் வழங்க உள்ளாா். இந்த நிகழ்வை பேராசிரியா்கள், மாணவியா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.