எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தீ விபத்தில் கடைகள் எரிந்து சேதம்

போச்சம்பள்ளியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

Updated On :24 டிசம்பர் 2021, 7:10 pm

போச்சம்பள்ளியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சந்தூா் சாலையில் சென்னப்பன் (60) என்பவா் தென்னங்கீற்றால் வேயப்பட்ட கொட்டகையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். இவரது கடையின் அருகே, மாதையன் என்பவா், பலகாரம் வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், இவா்களின் கடைகளில் இருந்து கரும்புகை வருதைக் கண்ட அருகில் இருந்தவா்கள், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதற்குள் இரு கடைகளிலும் தீ முழுவதுமாகப் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரா்கள், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாகவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து, போச்சம்பள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.