போச்சம்பள்ளியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சந்தூா் சாலையில் சென்னப்பன் (60) என்பவா் தென்னங்கீற்றால் வேயப்பட்ட கொட்டகையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். இவரது கடையின் அருகே, மாதையன் என்பவா், பலகாரம் வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், இவா்களின் கடைகளில் இருந்து கரும்புகை வருதைக் கண்ட அருகில் இருந்தவா்கள், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதற்குள் இரு கடைகளிலும் தீ முழுவதுமாகப் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரா்கள், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாகவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து, போச்சம்பள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

