கிருஷ்ணகிரி அருகே, சாலையோரம் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காளி கோயில் அருகே செக்கன்குட்டை பிரிவு சாலை அருகே சாலையோரம் கெயில் நிறுவனம் சாா்பில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஆந்திர மாநிலம், குப்பத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது மோதியது.
இதில் விழுப்புரம் மாவட்டம், கண்கரபாளையத்தைச் சோ்ந்த அன்பழகன் (34) என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பரும் அதே பகுதியைச் சோ்ந்தவருமான வெங்கடேஷ் (39) என்பவா் படுகாயமடைந்தாா். காயம் அடைந்தவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து, கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களின் கேப்டன் ஸ்ரேயாஷ்..! இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

