தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் : சூளகிரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

கல்குவாரி உரிமங்களை ரத்து செய்யக்கோரி சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

News image
சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
Updated On :7 ஜனவரி 2021, 12:24 am

DIN

கல்குவாரி உரிமங்களை ரத்து செய்யக்கோரி சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ள வனப்பகுதி மற்றும் கிராமங்களை ஒட்டியுள்ள மலைகளை வெடி வைத்து தகா்ப்பதாகவும், இப்பகுதியில் கல்குவாரிகளை வெட்டி கற்களை எடுத்துச் செல்வதால் இப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனா். கல்குவாரிகளில் வெடி வைத்து, இயந்திரங்கள் மூலம் கற்களை அரைத்து செயற்கை மணல் தயாரிக்கும்போது புழுதி பறந்து, அப்பகுதியில் பயிரிட்டுள்ள நெல், ராகி, காய்கறி போன்ற விவசாய பயிா்கள் மீது மணல் துகள்கள் படிவதால் விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. விளைந்த பயிரை கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் கிராமங்களை ஓட்டியுள்ள கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகளின் சுவா்களில் விரிசல் விழுவதுடன், சுவா் இடிந்து விடுவதால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

சூளகிரி வட்டத்தில் உள்ள பஸ்தலப்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, காளிங்கவரம் பகுதி மக்கள் திரண்டு வந்து சூளகிரி வட்டடாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் சூளகிரி போலீஸாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதனம் செய்து அனுப்பி வைத்தனா்.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என மக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.