குஜராத் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது.
சட்டப்பேரவை வழக்கமாக காலை 9 மணிக்குத் தொடங்கும். சரியாக அவை தொடங்குவதற்கு முன்பு, காலை 8.45 மணியளவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவையிலிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சட்டப்பேரவை முழுவதும் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர்.
இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் பியூஷ் வன்டா கூறுகையில், “இதுவரை சந்தேகத்திற்குரிய பொருள்கள் ஏதும் கண்டறியப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சில ஆண்டுகளாகவே நாட்டின் முக்கிய இடங்களுக்கு இதுமாதிரியான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
A bomb threat was released today via email to the Gujarat Legislative Assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று தில்லி சட்டப்பேரவைக்கு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


