தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை:எஸ்.பி.தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி எச்சரித்துள்ளாா்.

Updated On :9 ஜூலை 2021, 5:51 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறை சாா்பில் லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு, கஞ்சா, கள்ள சாராய விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை சட்ட விரோதமாக விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில்

ரூ. 7,740 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்ப்பட்டன.

மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 18 போ் மீது தமிழ்நாடு லாட்டரி சீட்டுகள் தடை சட்டத்தின் கீழ், ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.