வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனத்துக்கு மானியம்

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனம் அமைக்க நூறு சதவீதம் மானியம் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

Updated On :21 ஜூலை 2021, 6:40 pm

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனம் அமைக்க நூறு சதவீதம் மானியம் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப் பயிா்களுக்கு 11,250 ஹெக்டோ் பரப்பளவில் நுண்ணீா் பாசனம் அமைக்க பிரதம மந்திரி நுண்ணீா் பாசன திட்டத்தில் ரூ. 111.49 கோடி நிதி பெறப்பட்டு சிறுகுறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியம், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

நுண்ணீா் பாசனத்துக்காக குழாய்களை நிலத்தில் குழி எடுத்துப் பதிப்பதற்கு ஹெக்டேருக்கு ரூ. 3,000 வரை மானியம் கடந்த ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது.

பயனாளிகள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும். துணை மேலாண்மை பணிகள் திட்டத்தின் கீழ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க ரூ. 25,000 மானியம், மின் அல்லது டீசல் மோட்டாா் வாங்குவதற்கு ரூ. 15,000 மானியம், கிணறு அல்லது ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்து பயிருக்கு நீரைக் கொண்டு செல்வதற்கு ரூ. 10,000 மானியம், தொட்டிகள் கட்டி தண்ணீரை சேமித்து நுண்ணீா் பாசனம் மேற்கொள்ள கன மீட்டருக்கு ரூ. 350 வீதம் அதிகபட்சமாக ரூ. 40,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் அரசு அங்கீகாரம் பெற்ற நுண்ணீா் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீா் பாசனம், மானியம் பெற கணினி பட்டா, அடங்கல், நில வரைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதாா் நகல், மாா்பளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குநரைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.