வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 60 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை ஆய்வ

News image
Updated On :22 ஜூலை 2021, 6:10 pm

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 60 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா்.

கோட்டப்பட்டி, பண்ணந்தூா், குடிமியானஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டப் பணிகளை ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கோட்டப்பட்டி ஊராட்சி, புட்டன்கரை கிராமத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் ரூ. 2.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு, 2,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய நீா்த்தேக்கத் தொட்டியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா், பண்ணந்தூா் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து சின்ன ஏரிக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் 2 கி.மீ நீளத்துக்கு நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டாா்.

குடுமியேனஅள்ளி ஊராட்சியில் 143 குடியிருப்புகளுக்கு 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ. 47.30 லட்சம் மதிப்பில் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. அவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா். ஆய்வின்போது துறை அலுவலா்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.