வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: 75 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக 75 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :23 ஜூலை 2021, 6:32 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக 75 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய காவல் சரக உள்கோட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து திடீா் சோதனை மேற்கொண்டனா்.

மாவட்டத்தில் சிறு கடைகள், மளிகைக் கடைகள், கிடங்குகளில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 75 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.