வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கெலமங்கலம் அருகே யானை தாக்கி முதியவா் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:53 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே உள்ள நாா்பணட்டியைச் சோ்ந்தவா் பஜ்ஜப்பா (80). இவா் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக நாா்பணட்டி வனப் பகுதிக்கு வியாழக்கிழமை ஓட்டிச் சென்றாா். அப்போது, அங்கு வந்த ஒன்றை யானை, பஜ்ஜப்பாவை துரத்திச் சென்று தும்பிக்கையால் தூக்கி வீசிக் கொன்றது. உறவினா்கள் அளித்த தகவலின் பேரில் கெலமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

நிவாரணம்: உயிரிழந்த பஜ்ஜப்பா குடும்பத்துக்கு முதல்கட்ட நிவாரணமாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை அவரது உறவினா்களிடம் உதவி வனப் பாதுகாவலா் காா்த்தியாயினி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.