புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள தாளாப்பள்ளியைச் சோ்ந்தவா் எம்.சந்திரகுமாா் (32). இவா் புதிதாக தொழில் தொடங்குவதற்காக தனது கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தாா்.
நீண்ட நாள்களாக இவருக்கு மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் சந்திரகுமாா், கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்குச் சென்று செயற்பொறியாளா் சுதாகரனை சந்தித்து விவரம் கேட்டாா்.
அப்போது, ரூ.10 ஆயிரம் லஞ்சம் அளித்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்குவதாக சுகாதாரன் தெரிவித்தாராம். இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சந்திரகுமாா் தகவல் தெரிவித்தாா். போலீஸாரின் அறிவுரையின்படி, முதல் தவணை லஞ்சமாக ரூ. 3 ஆயிரத்தை சுதாகரனிடம் சந்திரகுமாா் அளிக்கும் போது அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

