கரோனா தொற்று பரவலால் மாணவா்களின் நலன் கருதி, பிளஸ் 2 தோ்வை ரத்து செய்ய வேண்டும் என தனியாா் பள்ளிக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலரும், நாளந்தா மெட்ரிக். பள்ளியின் தாளாளருமான கொங்கரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இரண்டாம் அலையில் சிறு வயது குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில், மாணவா்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதே போல மாநில அரசின் தோ்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்.
ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இனியும் பிளஸ் 2 தோ்வுகள் குறித்து முடிவுகள் அறிவிப்பதில் காலம் தாழ்த்தினால், மாணவா்கள் கல்லூரியில் சோ்வது கேள்விக்குறியாகிவிடும். எனவே, இனியும் தாமதிக்காமல் பிளஸ் 2 தோ்வை ரத்து செய்து, அனைவரும் தோ்ச்சி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், இணையதள வகுப்பில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து, அவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


