வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கல்

ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸை தனியாா் நிறுவனம் வழங்கியது. ஒசூா் அரசு மருத்துவமனையில் சிலருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸை தனியாா் நிறுவனம் வழங்கியது. ஒசூா் அரசு மருத்துவமனையில் சிலருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி மருத்துவக் கல்லூரிக்கு நோயாளிகளை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது. ஏற்கெனவே ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உள்ள நிலையில் தற்போது கரோனா காலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது.

இதனையறிந்த ஒசூா் கேன் பின் ஹோம்ஸ் நிறுவனம் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு புதிதாக ஆம்புலன்ஸை வெள்ளிக்கிழமை வழங்கியது. அந்த ஆம்புலன்ஸை ஒசூா் சாா் ஆட்சியா் நிஷாசாந்த் கிருஷ்ணா கொடி அசைத்து தொடக்கி வைத்தாா். அப்போது ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் பூபதி உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.