புது தில்லி : வாக்காளர்களைக் கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டுமென பணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களைக் கட்டாயம் வாக்கு செலுத்த வழிமுறைகள் வகுக்கச் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. வாக்கு செலுத்தாத வாக்காளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் கிடைக்காமல் தடுக்கப்படுவதை வழிவகை செய்ய வழிமுறைகள் வகுக்க தேர்தல் ஆணையத்தை நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று அந்த பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீது தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், மனுதாரரான அஜய் கோயல் இவ்விவகாரத்தில் சம்பந்தப்படடுள்ள அரசிடம் கோரிக்கையை எடுத்துச்செல்ல கேட்டுக்கொண்டது. இவ்விவகாரமானது அரசின் கொள்கை அடிப்படையிலானது அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வாக்காளர்கள் கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டும் என்பதை விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாக்கிட முடியும் என்றும் அதனைக் கட்டாயப்படுத்தி நிறைவேற்ற முடியாது என்றும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ஒரு குடிமகன் வாக்கு செலுத்த செல்லவில்லை என்றால் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்? அத்தகைய வாக்காளர்களைக் கைது செய்ய நீதிமன்றம் அறிவுறுத்த முடியுமா என்ன? என்றும் கேள்வியெழுப்பி அந்தப் பொதுநல மனுவை நிராகரித்துவிட்டது.

கேரளத்தில் சக்கர நாற்காலியில் சென்று வாக்கு செலுத்திய மூத்த வாக்காளர் ஒருவர் - Center-Center-Kochi
Summary
The Supreme Court on Thursday refused to entertain a PIL seeking directions to make voting compulsory in the country, saying such a mandate falls within the "policy domain" and cannot be issued by the judiciary.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தபால் வாக்கு பெறும் பணி தொடக்கம்! உறவினா் வீட்டில் ஆட்சியா் ஆய்வு!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

என்ஜின் குத்தகை நிலுவை: ஸ்பைஸ்ஜெட் ரூ.74 கோடி செலுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு

பெண்களை 3 நாள்கள் தீண்டத்தகாதவராக நடத்த முடியாது: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


