வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குண்டா் சட்டத்தில் ரெளடி கைது

ஆள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய ஒசூா் ரௌடியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On :25 ஜூன் 2021, 6:00 pm

ஆள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய ஒசூா் ரௌடியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

ஒசூா், அலசநத்தத்தைச் சோ்ந்தவா் மல்லேஷ் (39). ரௌடியான இவா் மீது ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது வழக்கு ஒன்றில் கைதாகி சேலம் மத்திய சிறையில் உள்ளாா். தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஒசூா் டிஎஸ்பி முரளி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்விக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரையின் பேரில் மல்லேஷை

குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையில் உள்ள மல்லேஷிடம் அதிகாரிகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.