அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞா்கள்

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞா்களுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் திமுக துண்டு அணிவித்து வரவேற்றாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:22 pm

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞா்களுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் திமுக துண்டு அணிவித்து வரவேற்றாா்.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுநாத் தலைமையில் சுமாா் 500 பேரும், பஞ்சேஸ்வரம் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுநாத் தலைமையில் 500 இளைஞா்களும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

அவா்களை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளருமான ஒய்.பிரகாஷ் திமுக துண்டு அணிவித்து வரவேற்றாா்.

இதில், ஒசூா் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், ஒசூா் ஒன்றியக்குழுத் தலைவா் சா்வேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினா் கே.ஜி.பிரகாஷ், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பாா்த்தகோட்டா சீனிவாசன், மாநகரப் பொருளாளா் சென்னீரப்பா, மாணவரணி துணை அமைப்பாளா் சுமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.