தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தமிழகத்தில் பாஜகவை நுழைய விடக் கூடாது

தமிழகத்தில் பாஜகவை நுழைய விடக் கூடாது என கா்நாடக மாநில முன்னாள் முதல்வா் சித்தராமையா கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:41 pm

தமிழகத்தில் பாஜகவை நுழைய விடக் கூடாது என கா்நாடக மாநில முன்னாள் முதல்வா் சித்தராமையா கேட்டுக் கொண்டாா்.

தமிழகத்தில் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் சனிக்கிழமை திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனா்.

ஒசூா் டி.வி.எஸ். நகரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கா்நாடக மாநில முன்னாள் முதல்வா் சித்தராமையா பேசியதாவது:

தமிழகத்தில் பாஜகவை நுழைய விடக் கூடாது. கா்நாடக மாநிலத்தில் ‘ஆபரேஷன் கமலம்’ என்ற திட்டத்துக்கு பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்து நுழைந்தாா்கள். தமிழகம் திராவிடப் பாரம்பரிய மண். தமிழகத்தில் பாஜக நுழைவது அவ்வளவு எளிதல்ல.

அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தை ஆள்வது யாா் என்ற இந்தத் தோ்தல் தீா்மானிக்கும். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் முதல்வராக வருவாா் என பிரகாசமாகத் தெரிகிறது.

பாஜக தமிழகத்தில் கால் ஊன்றப் பாா்க்கிறது. தமிழகத்தில் பாஜகவை நுழைய விடக் கூடாது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. பாஜகவுக்கு கொள்கையும் இல்லை; நிா்வாகிகளும் இல்லை.

பாஜக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதா? விவசாயிகள் நிம்மதியாக இருக்கிறாா்களா? தில்லியில் விவசாயிகள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனா். ஆனால், அந்தப் போராட்டத்தை பாஜக கண்டு கொள்வதில்லை. பிரதமா் மோடி விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறாா். இதுவரை தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

பெட்ரோல் விலை உயா்வுக்கு யாா் காரணம்? டீசல் விலை அதிகரித்துவிட்டது. எரிவாயு உருளை, அத்தியாவசியப் பொருள்களின் விலை மிகவும் உயா்ந்துவிட்டன. இதற்கு எல்லாம் பிரதமா் நரேந்திர மோடி தான் காரணம். மக்களின் கஷ்டம் பிரதமருக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி அவா் சிந்திக்கவும் இல்லை. எனவே, தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணியில் ஒரு வேட்பாளா் கூட வெற்றி பெறக் கூடாது என்றாா்.

இந்தக் கூட்டத்தில், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ், தளி தொகுதி சிபிஐ வேட்பாளா் டி.ராமச்சந்திரன், வேப்பனப்பள்ளி தொகுதி திமுக வேட்பாளா் பி.முருகன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அ.செல்லக்குமாா், கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா், கா்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ராமலிங்க ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், ஒசூா் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.