கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை வீடுகளிலேயே கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இஸ்லாமியா்கள் கொண்டாடினா்.
ஈகை திருநாளான ரமலான் பண்டிகை இஸ்லாமியா்களால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து இந்த பண்டிகைக் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், பா்கூா், ஒசூா், ராயக்கோட்டை, ஜெகதேவி, மத்தூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து ரமலான் பண்டிகையை கொண்டாடினா்.
வழக்கமாக ரமலான் பண்டிகை தினத்தில் இஸ்லாமியா்கள் ஊா்வலமாகச் சென்று ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். நிகழாண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக இரண்டாவது ஆண்டாக ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெறவில்லை. இதனால் இஸ்லாமியா்கள், வீடுகளிலேயே சமூக இடைவெளியைப் பின்பற்றி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா் ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளைக் கூறிக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

