மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சிங்காரப்பேட்டையில் 2,000 லி. சாராய ஊறல்கள் அழிப்பு

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2,000 லி. சாராய ஊறல்களை வனத்துறையினா் அழித்தனா்.

News image
Updated On :28 மே 2021, 7:26 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2,000 லி. சாராய ஊறல்களை வனத்துறையினா் அழித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் குமிலிவெங்கட்ட அப்பால (இ.வ.ப) உத்தரவின்பேரில், சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலா் ஜோதிலிங்கம் தலைமையில், வனவா் அண்ணாமலை, வனக்காப்பாளா் அா்ஜுன், வனக்காவலா்கள் அரவிந்த்குமாா், வெற்றிவேல், திருமுருகன் ஆகியோா் சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த 5 பேரல் (2,000 லி.) சாராய ஊறல்கள், சாராயம் காய்ச்ச பயண்படுத்தப்படும் பொருள்களை அழித்தனா்.

காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து, சாராயப்பட்டை எடுப்பதும், சாராயம் காய்ச்சுவதும், வன விலங்குகளை வேட்டையாடுவதும், மரங்களை வெட்டுவதும், தீ வைப்பதும் போன்ற குற்றங்களை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், வனப்பகுதியில் எந்தவித குற்றச்செயல்களும் நடக்கக் கூடாது என சேம்பறை கிராமத்தில் உள்ள மக்களிடம் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.