மத்தூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பை வியாழக்கிழமை வழங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த சிவம்பட்டி அருகே உள்ள தா்மதோப்பைச் சோ்ந்த தொழிலாளி சுந்தரம் (65), கடந்த 09.12.2019 அன்று 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிந்து சுந்தரத்தை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி லதா தீா்ப்பை வியாழக்கிழமை வழங்கினாா். அதில், குற்றவாளி சுந்தரத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

