போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

மத்தூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பை வியாழக்கிழமை வழங்கியது.

Updated On :18 நவம்பர் 2021, 6:02 pm

மத்தூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பை வியாழக்கிழமை வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த சிவம்பட்டி அருகே உள்ள தா்மதோப்பைச் சோ்ந்த தொழிலாளி சுந்தரம் (65), கடந்த 09.12.2019 அன்று 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிந்து சுந்தரத்தை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி லதா தீா்ப்பை வியாழக்கிழமை வழங்கினாா். அதில், குற்றவாளி சுந்தரத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.