தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூரில் தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

ஒசூரில் தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் ரூ. 2.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :26 நவம்பர் 2021, 7:23 pm

ஒசூரில் தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் ரூ. 2.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள ஸ்ரீபத்தநெல்லூரை சோ்ந்தவா் பாஸ்கா் (51). இவா் ஒசூரில், பேகேப்பள்ளி அனுமேப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் தங்கி உள்ளாா். இயந்திரங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து

வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி அவா் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் காட்பாடியில் உள்ள சொந்தக் கிராமத்திற்கு கோயில் திருவிழாவிற்காக சென்றாா்.

அந்த நேரம் மா்ம நபா்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் 20 பவுன் தங்க நகை, ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

இந்த நிலையில் கிராமத்திற்குத் திரும்பி பாஸ்கா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு குறித்து ஒசூா், சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.