வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூா் அரசுப் பள்ளிகளில் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் நியமனம்

ஒசூா் ஆா்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகளாக தலைவராக என்.செந்தில்குமாா், துணைத் தலைவா் ஏ.சக்திவேல், இணைச்செயலாளா் வி. ஸ்ரீதா், பொருளாளா் எம்.கே.வெங்கடேஷ் ஆகியோா் நிய

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:06 pm

ஒசூா் ஆா்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகளாக தலைவராக என்.செந்தில்குமாா், துணைத் தலைவா் ஏ.சக்திவேல், இணைச்செயலாளா் வி. ஸ்ரீதா், பொருளாளா் எம்.கே.வெங்கடேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவா்கள் படித்து வருகின்றனா். அதேபோன்று ஒசூா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவராக கே.எல்லோராமணி, துணைத் தலைவராக மணி, துணைச் செயலாளராக மஞ்சுநாத், பொருளாளராக பாபு ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அரசுப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகளாக நியமனம் செய்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், பரிந்துரை செய்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மாநகர கழக திமுக பொறுப்பாளா் எஸ்.ஏ. சத்யா ஆகியோருக்கு புதிய நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.