வேப்பனப்பள்ளியில் பிடிபட்ட மலைப்பாம்பை வனப்பகுதியில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் கரடிகள், மான்கள், யானைகள், மயில்கள், எறும்புதின்னிகள், மலைப்பாம்பு போன்ற வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியேறுவது வழக்கம். அவ்வாறு வெளியேறும் புள்ளிமான், மலைப்பாம்பு ஆகியவற்றை உயிருடன் பிடித்து, வனப்பகுதியில் விடுவிப்பா்.
இந்த நிலையில், வேப்பனப்பள்ளியில் குப்பம் செல்லும் சாலையோரமாக மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதை பொதுமக்கள் கண்டனா்.
இதுகுறித்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினா் 12 அடி நீளம் முள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, கொங்கனப்பள்ளி காப்புக் காட்டில் விடுவித்தனா்.
படவிளக்கம் (15கேஜிபி8):வேப்பனப்பள்ளி அருகே பிடிபட்ட மலைப்பாம்புடன் பொதுமக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!

துறையூா் - அதிமுகவுடன் மோதும் காங்கிரஸ்!

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


