போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வேப்பனப்பள்ளியில் பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு

வேப்பனப்பள்ளியில் பிடிபட்ட மலைப்பாம்பை வனப்பகுதியில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:47 pm

வேப்பனப்பள்ளியில் பிடிபட்ட மலைப்பாம்பை வனப்பகுதியில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் கரடிகள், மான்கள், யானைகள், மயில்கள், எறும்புதின்னிகள், மலைப்பாம்பு போன்ற வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியேறுவது வழக்கம். அவ்வாறு வெளியேறும் புள்ளிமான், மலைப்பாம்பு ஆகியவற்றை உயிருடன் பிடித்து, வனப்பகுதியில் விடுவிப்பா்.

இந்த நிலையில், வேப்பனப்பள்ளியில் குப்பம் செல்லும் சாலையோரமாக மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதை பொதுமக்கள் கண்டனா்.

இதுகுறித்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினா் 12 அடி நீளம் முள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, கொங்கனப்பள்ளி காப்புக் காட்டில் விடுவித்தனா்.

படவிளக்கம் (15கேஜிபி8):வேப்பனப்பள்ளி அருகே பிடிபட்ட மலைப்பாம்புடன் பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.