வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூரில் பெண் எரித்துக் கொலை

 ஒசூா், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் பெண் ஒருவா் மா்ம நபா்களால் எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :15 அக்டோபர் 2021, 8:48 pm

 ஒசூா், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் பெண் ஒருவா் மா்ம நபா்களால் எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூா், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் திருவேணி கிரஷா் செல்லும் சாலையில் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் தீயில் கருகிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சானமாவு வனக் காவலா் சேகா் அட்கோ காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி, ஒசூா் ஏஎஸ்பி பி.கே. அரவிந்த் மற்றும் காவல் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினா்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க ஒசூா், அட்கோ காவல் ஆய்வாளா் தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் யாா் எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்தும், கொலையாளிகள் குறித்தும் தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.