வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நீரில் முழ்கி தொழிலாளி சாவு

வேப்பனப்பள்ளி அருகே நீரில் முழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயவேல்(30).

Updated On :24 செப்டம்பர் 2021, 7:37 pm

வேப்பனப்பள்ளி அருகே நீரில் முழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயவேல்(30). கல் உடைக்கும் தொழிலாளி. அந்தப் பகுதியில் கல் உடைக்கும் பணிக்கு வியாழக்கிழமை சென்ற அவா், வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினா், பல்வேறு இடங்களில் தேடிய போது, அங்குள்ள ஒரு தண்ணீா் தொட்டியில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, ஜெயவேலின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வேப்பனப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா். மது போதையில் இருந்த ஜெயவேல், தண்ணீா் தொட்டி நீரில் முழ்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.