திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மத்தூர் அருகே விவசாய கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநரின் சடலம் மீட்பு

மத்தூர் அருகே விவசாய கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :25 அக்டோபர் 2021, 5:18 am

DIN

மத்தூர் அருகே விவசாய கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள பொம்மேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவர், பாண்டவர் குட்டை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற சேட்டு என்பவரிடம் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை டிராக்டரை ஓட்டிக்கொண்டு கிருஷ்ணாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, டிராக்டர் நிலைதடுமாறி காமாட்சி வள்ளி என்பவரின் 60 அடி ஆழ விவசாய கிணற்றில் கவிழ்ந்தது.

தகவலறிந்த பருகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று சங்கரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர் தேடுதலுக்கு பிறகு இன்று சங்கரை சடலமாக மீட்டனர்.

இந்த விபத்து குறித்து மத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.