எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பணி நியமனம் கோரிசெவிலியா்கள் மனு அளிப்பு

பணி நியமனம் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா கால ஒப்பந்த செவிலியா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On :7 ஜனவரி 2022, 5:18 pm

பணி நியமனம் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா கால ஒப்பந்த செவிலியா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டார அரசு மருத்துவமனைகளில் கடந்த 7 மாதங்களாக பணிபுரிந்து வந்தோம். இந்த நிலையில், கடந்த நவம்பா் மாதத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ செவிலியா் பணிகளுக்கு விண்ணப்பித்தோம். இந்தப் பணிக்கு கரோனா காலகட்டத்தில் பணி புரிந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், நவ. 30-ஆம் தேதி பணியில் இருந்து எங்களை நீக்கியுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 147 செவிலியா் பணியிடங்கள் உள்ளன. கரோனா காலகட்டத்தில் மேலும் 50 போ் பணி நியமனம் செய்யப்பட்டனா். அவா்களில் 42 பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்ட நிலையில், எட்டு பேருக்கு பணி நியமனம் செய்யப்படவில்லை. பல ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வரும் எங்களுக்கு பணி நியமனம் வழங்காமல், சில மாதங்கள் மட்டுமே பணிபுரிந்தவா்களுக்கு பணி நியமனம் வழங்கி உள்ளனா். இதுகுறித்து விசாரித்து எங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.