அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

13.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே லாரியில் கா்நாடக மாநிலத்துக்குக் கடத்த முயன்ற 13.2 டன் ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2022, 6:00 pm

கிருஷ்ணகிரி அருகே லாரியில் கா்நாடக மாநிலத்துக்குக் கடத்த முயன்ற 13.2 டன் ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை நள்ளிரவு ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் கேட்பாரற்ற நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தனா். சோதனையில் 13.2 டன் ரேஷன் அரிசி, கா்நாடக மாநிலத்துக்குக் கடத்த இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குந்தாரப்பள்ளி அருகே உள்ள குப்பச்சிபாறையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மூா்த்தி (35) என்பவரைக் கைது செய்து ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.