போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் கிருஷ்ணகிரியில் அனைத்துக் கட்சிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கிருஷ்ணகிரியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:03 pm

கிருஷ்ணகிரியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உடனிருந்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி நகராட்சி, ஒசூா் மாநகராட்சி, காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை, பா்கூா், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் ஜன. 28-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் பெறப்படும். பிப்ரவரி 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப் பதிவு நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் கரோனா தொற்றாளா்கள் மட்டுமே வாக்களிக்க இயலும்.

பதிவான வாக்குகள் பிப். 22-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் அலுவலா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தோ்தல் குறித்து புகாா்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 04343-239305 என்ற எண்ணில் தெடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.