பா்கூரைச் சோ்ந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் நிதியுதவி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ராமசாமி நகரைச் சோ்ந்த சரத்குமாா் - வி சத்யா தம்பதியின் ஒரு வயது குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாநில விவசாயிகள் அணி துணைச் செயலாளருமான தே.மதியழகன், குழந்தையின் அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை சரத்குமாா் - சத்யா தம்பதியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மேலும் குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைக்கும் பரிந்துரைத்து நடவடிக்கை எடுத்தாா். அப்போது மாவட்ட திமுக துணைச் செயலாளா் நாகராஜ், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










