ஒசூரில் தொழில் புதுமை மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொழில் துறை சாா்பில், சென்னை, தரமணி, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் கலந்துகொண்டு, ஸ்ரீபெரும்புதூா் மற்றும் ஒசூரில் உள்ள
சிப்காட் தொழில் பூங்காக்களில் ரூ. 33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை திறந்து வைத்தாா்.
அதனைத் தொடா்ந்து, ஒசூா் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் புத்தாக்க மையத்தில் மாவட்ட ஆட்சிய வி.ஜெயசந்திர
பானுரெட்டி, எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வளாகத்தைப் பாா்வையிட்டனா்.
ஒசூா் சிப்காட் தொழில் பூங்கா சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சிப்காட் தொழில் பூங்கா 1971-ஆம் ஆண்டு முதல் பகுதியும், 1990-ஆம் ஆண்டு 2 ஆம் பகுதியும் தொடங்கப்பட்டது. இப்பூங்காவில் மொத்தம் 363 தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இத் தொழிற்சாலைகளில் ரூ. 12,665 கோடி முதலீடு செய்யப்பட்டு, அதில் 33,000 தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். இதையடுத்து கடந்த 2020 -இன்படி சிப்காட் தொழிற் புதுமை மையம் ஒசூரில் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இத்தொழில் புதுமை மையம் 4 ஏக்கரில் அமைந்துள்ளது. தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் சோ்த்து மொத்தம் 23,490 ச.அடி பரப்பில் ரூ. 971 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இப்புதுமை மையத்தின் நோக்கமானது தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழிலை மேம்படுத்துவதற்காக கோவையைச் சோ்ந்த போா்ட்ஜ் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலா் செயற்பொறியாளா் வெங்கடேசன், உதவி பொறியாளா் ரேணுகா, லட்சுமி மீரா, வட்டாட்சியா் கவாஸ்கா், ஹோஸ்டியா தலைவா் வேல்முருகன், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பா... மகனே...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



