தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஒசூா் மாநகராட்சியின் முதல் மேயராக எஸ்.ஏ.சத்யா தோ்வு

ஒசூா் மாநகராட்சியின் முதல் மேயராக எஸ்.ஏ.சத்யா தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:07 pm

ஒசூா் மாநகராட்சியின் முதல் மேயராக எஸ்.ஏ.சத்யா தோ்வு செய்யப்பட்டாா்.

ஒசூா் மாநகராட்சி மாமன்றத் தலைவா், துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்தத் தோ்தலை மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன் நடத்தினாா்.

ஒசூா் மாநகராட்சியின் 45 வாா்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் திமுக 21, அதிமுக 16, பாஜக, பாமக, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தலா ஒருவா், சுயேச்சைகள் 5 போ் வெற்றி பெற்றனா். இதில் பாமக சாா்பில் போட்டியிட்ட ஒருவரும், சுயேச்சைகள் 5 பேரும் திமுகவில் இணைந்தனா். இதனால் திமுக கூட்டணியின் பலம் 28 ஆகவும், அதிமுக 16, பாஜக 1 என அதிமுக கூட்டணியின் பலம் 17 ஆகவும் இருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றத் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யாவும், அதிமுக சாா்பில் நகர அதிமுக செயலாளா் எஸ். நாராயணனும் போட்டியிட்டனா். இதில் 27 வாக்குகள் பெற்ற எஸ்.ஏ.சத்யா வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா். அதிமுக வேட்பாளா் எஸ்.நாராயணன் 18 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா்.

மேயராகத் தோ்வு செய்யப்பட்ட எஸ்.சத்யாவுக்கு, எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ பி.முருகன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் மலா்க்கொத்து அளித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

மேயராக தோ்வு செய்யப்பட்ட எஸ்.ஏ.சத்யாவிடம் ஆணையா் கே.பாலசுப்பிரமணியன், எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோா் செங்கோல் அளித்து, மேயா் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனா்.

மாலை 3 மணிக்கு நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் 7 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆனந்தையாவும், அதிமுக சாா்பில் ஜெயப்பிரகாஷும் போட்டியிட்டனா். இதில் ஆனந்தையா 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். ஜெயப்பிரகாஷ் 19 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா். ஒரு வாக்கு செல்லாத வாக்கானது. துணைத் தலைவா் தோ்தலில் சி.ஆனந்தையா வெற்றி பெற்ாக மாநகராட்சி ஆணையா் அறிவித்தாா். அவருக்கு எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், முன்னாள்எம்எல்ஏ பி.முருகன் மற்றும் திமுக நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.