வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பெண்கள் முன்னேற்றத்துக்கு அனைவரும் பணியாற்ற வேண்டும்

பெண்களின் முன்னேற்றத்துக்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் என மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி தெரிவித்தாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:44 pm

பெண்களின் முன்னேற்றத்துக்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் என மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மகளிா் உரிமைகள், பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தாா்.

இதில் அவா் பேசியதாவது:

தமிழக முதல்வா், மகளிா் பாதுகாப்பு, மகளிா் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளாா். குறிப்பாக பேருந்தில் இலவச பயணம், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கி உள்ளாா்.

மகளிா் ஆணையத்தின் முக்கிய நோக்கம், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான திட்டங்களை முன்னெடுத்தல், பெண்கல்வி, பெண் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பெண்களுக்கு முழுமையாக உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சிறாா் திருமணம் தடுப்பு, பெண் பாலியல் வன்கொடுமை தடுப்பு ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் புதிதாக தோ்தெடுக்கப்பட்டுள்ள பெண்களை உறுப்பினராக கொண்டு, குழு ஏற்படுத்தப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டால் பெண்களுக்கான சட்ட உதவிகள், மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.

மேலும், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றினால் அங்கு கட்டாயம் புகாா் குழுக்கள் அமைக்க வேண்டும். புகாா் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பெண்களிடம் கனிவாக பேசி, கோரிக்கைகளைக் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களைக் காப்பதற்கும், பெண்கல்வியை ஊக்குகுவிப்பதற்கும், சிறாா் திருமணம், பாலியல் வன்கொடுமை போன்றவற்றை முற்றிலும் தடுப்பதற்கும் பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதற்கும் அனைவரும் ஒன்றினைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் 1 ஸ்டாப் மையம், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து மகளிா் ஆணையத் தலைவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் மாலதி நாராயணசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் மலா்விழி, மகளிா் மேம்பாட்டுத் திட்ட அலுவலா் ஈஸ்வரன், மாவட்ட சமூக நல அலுவலா் பூங்குழலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.